வேல் போல் கூர்ந்த கண்களோ,
நீர் சுழல் போல் கன்னக்குழிகளோ,
முத்துகளை பதுக்கிய ரோஜா இதழ்களோ,
ரவிவர்மன் கற்பனை ஒப்ப வடிவமோ,
அவள்..
அறிவில் அளவற்றவளோ,
தன்னம்பிகையில் சிகரமோ,
என் தோழி அவளோ,
என் தாய் போல் வருவாளோ,
இவை..
என் கற்பனையோ,
என் பேராசையோ,
என் உயிர் துணை யார் என்ற யோசனையோ..?
தெரியவில்லை..!
இது..
எதிர்பார்ப்புகளின் ஆரம்பம் மட்டுமே..,
முழுவதும் எழுத காகிதம் போதாது..!
No comments:
Post a Comment